Entry: கடவுளும் கடைசித் தமிழனும் Dec 18, 2003



கடவுள் என்கிற சமாச்சாரத்துடன் தமிழனுக்குள்ள தொடர்பு அளப்பரியது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய தமிழர்களும் கூட ஒரு கல்லை நட்டு வைத்து தெய்வமாகத் தொழுதனர்" என்று வாதம் செய்யக் கூடிய ஆராய்ச்சி "மணி"கள் ஆங்காங்கே ஆயிரம் உன்டு. இந்தப் பக்கம் பார்த்தால், "கல்லைப் பார்த்துக் கன்னத்தில் ஏனடா போட்டுக் கொள்கிறாய், உன் செருப்பை எடுத்து அந்தக் கல்லின் கன்னத்தில் போடு" என்று சொல்வதற்கும் ஆட்கள் அநேகம் உன்டு.

சாமி என்றால் என்ன என்று இன்று சிறு பிள்ளைகளைக் கேட்டால், நம்மை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "அவர் போலீஸ் இல்லை, பொறுக்கி..!!" என்று இல்லாத மீசையைத் தடவி விட்டுக் கொண்டே சொல்வார்கள்.

கஷ்டம் வரும்போது கடவுளின் ஞாபகம் வருமென்று ஒரு சொலவடை உன்டு. இந்தக் காலத்தில் கடவுளின் பெயரால் தான் நிறைய கஷ்டங்கள் வருவதால், ஞாபகமும் வந்து தான் ஆக வேண்டியிருக்கிறது.

"காதல் சொன்ன கணமே, அது கடவுளைக் கண்ட கணமே" என்று பாடிப் புல்லரிக்க கடவுள் எவ்வளவு உதவி செய்கிறார் பாருங்கள்..

பண்டிகை என்ற பெயரில் தமிழர்கள் பல்வேறு தின்பண்டங்களை கலந்து கட்டி அடிப்பதற்கும் கடவுள் மிகவும் உறுதுணை செய்கிறார். கொழுக்கட்டை என்ன, கேக் என்ன, முறுக்கு சீடை என்ன, அடேயப்பா. கிராமத்து சாமிகள் மட்டும் குறைந்தவர்களா என்ன? நேர்த்திக்கடன் என்ற பெயரில் அவர்களுக்கும் படையலும், பிரியாணியும் பட்டையைக் கிளப்பும். அண்மைக் காலத் தடை வரும் வரை. இதனாலெல்லாம் வெகுண்டு, "அடப் பாவிகளா.. என் பேரைச் சொல்லி இத்தனை தின்கிறீர்களே, எனக்குக் கொஞ்சமாவது உண்டா.." என்ற கோபத்தில் தான் பிள்ளையார் பால் குடித்த அற்புத லீலைகள் நடந்திருக்கக் கூடும். யாமறியோம் பராபரமே..!!

நமக்குப் புரியாத விஷயங்களெல்லாம் கடவுளின் செயலில் சேர்த்தி என்பது தமிழனின் பரவலான நம்பிக்கை. டான்சி வழக்கில் விடுதலை எப்படிக் கிடைத்தது என்று யாருக்கும் புரியவில்லை. அதனால் அது "கடவுளின் செயல்." அதான் அவர்களே சொன்னார்களே..!!

தமிழனின் பரந்து விரிந்த மனத்தளத்தில் நடிகைகளும் கோவில் கட்டத் தக்க தெய்வமாவதுண்டு. நடிகர்களும் பாலபிஷேகம் செய்யத் தக்க சாமிகளாவதுண்டு.

இப்படியாக தமிழனின் வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருகும் கடவுளை சுலபத்தில் துரத்தி விட முடியுமா..?? கஷ்டம் தாம். அப்படி முயற்சிப்பவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.

   3 comments

usha
December 23, 2003   02:07 PM PST
 
«¼¼¡! À¡öŠ À¡ð¼ì §¸ðÎ ±ý¨Éô
§À¡Ä þý¦É¡Õ ¬Ùõ ¾¨Ä¨Â
«Ê츢ð¼¡Ã¡?
§À‰! §À‰ ¦Ã¡õÀ ¿ýÉ¡ þÕìÌ!
¯„¡
Pudhumai Virumbum Piththan
December 19, 2003   08:04 AM PST
 
Yes ma'am, no problem. Actually I'm an active blogger in another name, but I'd prefer this name for this blog.
Mathy Kandasamy
December 18, 2003   09:00 PM PST
 
Puthumai Virumbim Piththan - You want this to be your id?

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments