Entry: நான் கோடி காட்டுகிறேன்.. நீங்கள்... Dec 22, 2003



இந்தியாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்களைக் கடந்தது..
- நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் பெருமிதம்!!


பெருமிதப்பட வேண்டியது தான். கவிஞர்கள் ஏன் சும்மா இருக்கிறார்கள்??

ஆயிரம் உண்டிங்கு கோடி - எனில்
ஏழைகள் பசியால் வெந்து மடிவதென்ன நீதி?

என்று கவிதை எழுதி தங்கள் கோபக் கனலைக் காட்ட வாய்ப்பாக இருக்கிறதே..!!

10,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி இந்திய ரூபாய்கள்.. நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு நிறைய தேவைபடுமென்று சொல்கிறார்களே.. ஏதேனும் தேறுமா என்று முயற்சி செய்து பார்க்கலாம்.. அல்லது அரசியல்வாதிகளுக்கு இருக்கவே இருக்கிறது சாலை மேபாட்டுத் திட்டங்கள்.. வைர அறுகோணத் திட்டம் என்று ஒரு திட்டம் ஆரம்பித்து இன்னும் சில பொறியாளர்களைப் போட்டுத் தள்ள அரியதோர் வாய்ப்பு.. நடக்கட்டும்..!!

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments